உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

Spread the love

உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இவ்வேளை ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உக்கிரேன் இராணுவத்தை காப்பாற்றிட அமெரிக்கா போர் விமானங்களை வழங்குகிறது .

மேலும் உக்கிரேன் விமான படையினருக்கு வான் படை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .

உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல்கள் விமானங்கள் பதட்டம் அதிகரிப்பு

உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி ரசியா கண்டனம்

ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தவும் .ரஷ்ய இராணுவத்தின் ஆயுதங்களை சோதனை செய்யும் முகமான பரீட்ச்சார்த்த களமாக உக்கிரேனை அமெரிக்கா , பிரிட்டன் என்பன பயன்படுத்தி வருகின்றன .

உக்கிரேன் இராணுவத்தில் எண்பது வீதமான படைகள் இறந்தோ அல்லது காயமடைந்து உள்ளனர் என்கிறது மேற்குலக உளவு நிறுவனம் .

உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

இவ்வாறாக மாற்றமடைந்து வரும் களமுனையை தனது நலன் சார்ந்த நிலையில் அமெரிக்கா மாற்றியமைத்து நகர்கிறது .

நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினர் வழங்களுடன் நேரடி பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.

அமெரிக்காவின் இந்த செயல் பாடு ரஷ்யாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்கிரேன் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து பலத்த ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

முக்கிய பகுதிகளை மீட்கும் நோக்குடன் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மீதும் நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

ரஷ்ய இராணுவத்தின் இவ்வகையான தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக அமைந்துள்ளதை ஆடுகளம் காண்பித்து செல்கிறது .

உக்கிரன் ரஷ்ய போர் உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் உணவு பற்றாகுறையும் நிலவி வருகிறது .உக்கிரேன் ரசியா போரானது தொடர்ந்து நீடித்து செல்லும் என்றால் உணவு தட்டுப்பாட்டால் உலகில் பஞ்ச நிலை ஏற்படும் எனப்படுகிறது .

உக்கிரேன் நாட்டில் போர் மூண்ட நாள் முதல் இன்றுவரை பல மில்லியன் டொலருக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளியுள்ளது .

தொடர்ந்து மேற்குலக முதுகில் ஏறி நின்று ஆடிவரும் உகிரேனை ,அமெரிக்கா குருதீஸ் போராளிகளை கைவிட்ட நிலையை போன்று ,உக்கிரேனிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *