உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

Spread the love

உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

உடையார்கட்டு பகுதியில் இறுதி போர் உக்கிரம் பெற்ற காலத்தில் புலிகள் அமைப்பினால் பதுக்கி வைக்க பட்ட எரிபொருள் கலங்கள் மீட்க பட்டுள்ளன

போர் உக்கிரம் , பெற்று இலங்கை சிங்கள படைகள் முன்னேறி வந்த நிலையில் மக்கள்; வீடுகளில் வெட்ட பட்ட பதுங்கு குளிகளுக்குள் இந்த பொருட்கள் பதுக்கி வைக்க பட்டன

தற்போது உரிமையாளர்களினால் அந்த புட்டி பகுதி மண் நிரவப்பட்ட பொழுது ,மேற்படி கலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேற்படி விடயம் குற்ற புலனாய்வு துறையினருக்கு தெரிய வந்த நிலையில் ,குறித்த வீடு சுற்றி வளைக்க பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

மேலும் நீதிபதி ஒருவர் தலைமையில் அந்த அகழ்வு பணிகள் கண்காணிக்க படுவதாக தெரியவருகிறது ,

குறித்த பகுதியில் விடுதலை புலிகளின் பல்வேறு பட்ட அமைப்பின் முகாம்கள் நிர்வகிக்க பட்டு இருந்தன என்பது இங்கே கவனிக்க தக்கது

போர் முடிந்த 13 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவ்விதமான தடய பொருட்கள் தற்போது வரை கண்டு
பிடிக்க பட்டு வருகிறது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

தற்போது குறித்த வீட்டார் ,விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *