கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

Spread the love

கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர

சில்வாவின் வழிகாட்டுதல்களுக்கமைய இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில் சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆறு வீடுகள் கட்டப்பட்டு வரும் அதேவேளை

இந்த திட்டத்தை 66 பிரிவு பின் பொதுக்கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் 20வது இலேசாயுத படையணி, 24வது விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவு, 11வது கஜாபா ரெஜிமென்ட், 20 வது விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவு, 5 ஆயுத தளவாட

படைப்பிரிவு மற்றும் 2வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *