தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்

Spread the love

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்

நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு

நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் அங்குராந்கெத்த, ரன்தெட்டிய, வலப்பனே நில்தண்டாஹின்ன, நோர்வூட் இன்ஜஸ்டி

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் புரொடைஸ் தோட்ட மேற்பிரிவிற்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் சிலவற்றை திறப்பதற்கு அனுமதி

வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்கான சுமார் இரண்டாயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *