உன்னை தா உயிரே

Spread the love

உன்னை தா உயிரே

ஏக்கம் வந்து மனதை தாக்க
ஏனோ உன்னை தேடுது
ஆக்கம் வந்து உன்னில் வாங்க
அன்பை தானே பொழியுது

உந்தன் மொழி காதில் வீழ்ந்தால்
உள்ளம் ஏறி ஆடும்
உலகாளும் கோமகனாய்
உள்ளம் ஏறி பாடும்

அருகினில நீ இருந்தால்
அந்தி வானம் சிரிக்கும்
ஆடை எடுத்து வான் மறைத்து
அது உறக்கம் போடும்

வாழ்க்கை என்ற வட்டத்திலே
வாழ்வு ஒரு சருகு
ஆக்கம் பெற்று முடிந்து விட்டால்
அன்று பொழுது மகிழ்வு

கொஞ்ச நேரம் தழுவையில
கொடும் துயரும் பறக்கும்
அந்த நேரம் மட்டும் தானே
ஆனந்தமே சிறக்கும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 16-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *