முன்னாள் போராளிகருப்பையா ஜெயக்குமார் என்பவர் மீது தாக்குதல்
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கருப்பையா
ஜெயக்குமார் மீது சுஙேட்சைக் குழுவைச் சேர்ந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் அவரது சகோதரர் மற்றும் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பிலர் சந்திரகுமாரின் ஆதரவாளர் ஓருவர் உட்பட மூவர் தாக்கிய நிலையில் காயமடைந்த நிலையில்
கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொதுச்சந்தையின் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு
வரும் வர்த்தகரும் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினருமாக செயற்பட்டுவரும் ஒரு காலினை இழந்த முன்னாள் போராளியை கரைச்சிப்பிரதேசசபையின்
சுயேட்;சைக்குழுஉறுப்பினர்ஒருவரும் அவரது சகோதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர் உள்;ளிட்ட
மூவரும் இணைந்து தாக்கியதாகவும் காயமடைந்த இவர் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்;ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. சந்தை வர்த்தகரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்
முன்னாள் போராளியுமான கருப்பையா ஜெயக்குமார் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







