மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான் கூறுகிறது
சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடனான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை
செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
புதன்கிழமை ஜியோ நியூஸிடம் பேசிய குவாஜா ஆசிஃப், சவூதி அரேபியாவையும், மெக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களையும்
பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்றும், ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் அவற்றைப் பாதுகாப்பது இஸ்லாமாபாத்தின் கடமை என்றும் கூறினார்.
“மக்கா ஒப்பந்தம் எங்களுக்கும் பொருந்தும், நாங்கள் எங்கள் கடமையை நிறைவேற்றுவோம்,” என்று கூறிய ஆசிஃப், பாகிஸ்தான் என்ன செய்யக்கூடும் என்பது குறித்து விரிவாகக் கூறவில்லை.
புனித நகரத்தை குறிவைத்ததை ஹூதி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.







