இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலிதெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு லெபனானின் கஃபார் ருமான் நகரில், திங்கள்கிழமை அதிகாலையில் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில்,
இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அல் ஜசீராவின் ஒரு அறிக்கை, பலி எண்ணிக்கை 10 என்று குறிப்பிட்டுள்ளது; இதில், கட்டிடத்தின் மீதான தாக்குதலில் ஒன்பது பேரும், மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொருவரும் அடங்குவர்.







