கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்
Spread the love

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல் ,ஒன்று வந்து அடைந்துள்ளதாக இலங்கை கப்பல் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றி தெரியும் மிகப்பெரிய கப்பலாக விளங்கும் எடா இஸ்டல்லா சொகுசு கப்பலே இன்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மலேசியாவில் இருந்து 2022 சுற்றுலா பயணிகளை காவியபடி 682 பணியாளுடன் இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது.

2682 பேருடன் வருகை தந்துள்ள இந்தக் கப்பல் த,ற்பொழுது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.

இலங்கையில் தரித்திருக்கும் இந்தக் கப்பல் ,ஆஸ்திரேலியா பிரேசில் கனடா பெல்ஜியம் உள்ளிட்ட, 30 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை காவியப்படி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணிகள் இன்று கொழும்பு , கண்டி மற்றும், நீர்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள் .

அதன் பின்னர் கப்பலில் ஊடாக தமது இடம் நோக்கி பயணிப்பவர்கள் என தெரிய வருகிறது.

பல மாதங்களாக கடலில் பயணிக்கும் இந்தக் கப்பல் பயணத்தில், அவர்கள் தமது நேரங்களை செலவு செய்து உலக நாடுகளை சுற்றி பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகப்பெரும் ராட்சத கப்பலாக காணப்படும் இந்தக் கப்பல், இலங்கை வந்தடைந்துள்ளது ,இலங்கைக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொள்ளக் கூடிய விடயம் என சொல்லப்படுகிறது.

நீச்சல் குளங்கள் ஜிம் உடற்பயிற்சி மையங்கள், மருத்துவ முகாம்கள் ,உணவகங்கள் ,கொட்டல் ,படுக்கையறை ,களியாட்டவிடுதி , திரை படம் என பல விடயங்கள் இந்தக் கப்பலில் காணப்படுகிறது.

அவ்விதமான கப்பலே ,இப்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது..இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.