இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி
Spread the love

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி ,இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் 35 மக்கள் பலியாகியும் 109க்கு மேற்பட்டவர்கள் ,கடந்த 24 மணி நேரத்தில் காயமடைந்துள்ளதாக ,பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்து. இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான தாக்குதல் நடவடிக்கை யால் இடம்பெயர்ந்து இருக்கின்ற, அப்பாவி பொதுமக்கள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து அப்பாவி மக்கள் தற்காலிக கூடாரங்கள் தங்குமிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் ராணுவம், திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இரண்டு வருடங்களாக எட்டிப் பிடிக்கும் இருநாட்டு யுத்தத்தினால் ,அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் முடிவில்லாத தொடரும் இந்த யுத்தத்தினால், அப்பாவி மக்கள் பலியாகியும் ,காயமடைந்தும் அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை கவலை தரும் விடயமாகும்.