வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் ,2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்குச் சீட்டு விநியோகத்திற்காக தபால் திணைக்களம் அட்டைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தினார்.
இந்த வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று பல பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளது.
எனினும் சில தாமதங்களின் பொருட்டு கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம் இடம்பெறாது.
நவம்பர் 3ம் திகதி காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்படும்.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை








