விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்
விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர் ,இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது
வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஞானசார தேரோவின் ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு









