பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா

பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா
Spread the love

பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா

பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா தெரிவித்துள்ளார் ,தெற்கு என்னை செல்லை பிள்ளை என்கிறது ,வடக்கு மக்கள் உயிரையே தருகிறேன் என்கின்றனர் ,அதனால் இப்பொழுது நான் யார் பிள்ளை என அவர் கேள்வியை எழுப்பியுள்ளார் .

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி மருத்துவமனைக்கு பொறுப்பதிகாரியாக மருத்துவர் அருச்சுனா பணிமாற்றம் செய்பட்டு வருகை தந்து ,அங்கு காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக தீர்த்திட முனைந்த வேளை எழுந்த எதிர்ப்பு காரணமாக போர் வெடித்தது .

அதனை அடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக மருத்துவர் அருச்சுனா வெளிபடுத்தினார் .

இந்த விடயம் வெளியானதை அடுத்து ,மக்கள் மத்தியில் இவை மிக பெரும் சல சலப்பை ஏற்படுத்தின .

அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனாவிற்கு ஆதரவாக சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் போராட்டம் நடத்தினர் .

அதுவே சர்வதேச ரீதியில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தின .

துணிகரமாக பல தகவல்களை மருத்துவர் அருச்சுனா வெளியிட்டதை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பாதிக்க பட்ட மக்கள் நேரடியாக தமது சாட்சியங்களை வழங்கினர் .

அவை மேலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய சில மருத்துவர்கள் நடத்திய மோசடிகள் ,தில்லுமுல்லுகள் அம்பலமாகின .

பாதிக்க பட்ட மக்கள் வழங்கிய பல்வேறுபட்ட விடயங்கள் ,உலக தமிழர்களை உலுப்பியது .

அவவிதம் பாதிக்க பட்ட மக்கள் எமது டிக் டாக் live நிகழ்வில் நேரடியாக வந்து தமது கருத்துக்களை தெரிவித்தனர் .

அவை எம்மை தூக்கி வாரி போட்டன ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இந்த மக்கள் வழங்கிய தகவலை ஊடாக மருத்துவர் அருச்சுனா கூறிய உண்மை தான் என்பதை வலுப்படுத்தியுள்ளது .

மேலும்இவர்களை போல யாராவது பாதிக்க பட்டவர்கள் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் மக்களே .இந்த விடயங்களை துணிவோடு அம்பலப்படுத்திய மருத்துவர் அருச்சுனாவிற்கு எமது நன்றிகள் .