இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா
இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா ,பொதுமக்கள் இது சம்பந்தமான மிக ஆழமான அறிவினை கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் ஆகும் .
இல்லையெனில் எமது தமிழ் தலைமைகள் என்னை அவர்களுடைய எதிரியலாக பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதே நேரம் தமிழ் தலைமைகள் எனது சமூக மாற்றம் சம்பந்தமான ஆழமான அறிவினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தாவிட்டால் வடக்கு மாகாணத்திலே தேவையற்ற விதத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்படலாம் .
ஆதலால் தங்களுடைய ஆதரவு அணிகளை இந்த சமூகநல மாற்றம் சம்பந்தமான பிழையான கருத்துக்களை இடுவதை தயவு செய்து தவிர்க்குமாறு தாங்கள் பணிப்பதன் மூலம்,
முதிர்ந்த தமிழ் தலைவர்கள், ஐயா ஸ்ரீதரன் ,ஐயா சுமந்திரன், ஐயா விக்னேஸ்வரன் ,மற்றும் சாணக்கியன் ஐயா போன்றவர்கள், இந்த சமூக மாற்றத்தை கிழக்கிலும் கொண்டு வந்து,
தாங்கள் இந்த சமுதாய மாற்றத்தை அரசியல் மூலம் ஏற்படுத்தலாம் என்பது அடியேனின் அன்பான கருத்து.
இந்தப் பாதையில் தங்களுடன் சேர்ந்து சகல அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து உங்கள் பேராதரவுடன் வடக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தை மட்டும் இதுவரையில் நாங்கள் மாற்றுவதற்கு,
உங்களை இதயசுத்தியுடன் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு நான் இது ஏதாவது தவறுகளை செய்திருந்தால் அவற்றை உங்களுடைய பிள்ளைகளாக நினைத்து மன்னித்து ,
இந்த போராட்டத்தில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைத்துக் கொள்கிறேன்.
நான் சாவாச்சேரி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்பு, ஐயா ஸ்ரீதரன் அவர்களின் மகன் ,என்னுடைய நண்பன் என்பதால் ,அவர்களுடைய ஏதாவது உதவி வைத்தியசாலைக்கு கிடைக்குமா என்பதை ,
மெசஞ்சர் மூலம் கேட்டும் கால் பண்ணியும் கதைத்தேன் என்பதையும், இதன் மூலம் தங்களுக்கு நான் அரசியல் சாராதவன் என்பதை தெளிவாக சொல்ல விரும்புகின்றேன்.
என மருத்துவர் அருச்சுன இராமநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .இதன் ஊடக அரசியல் தலைகளினால் தனது தலை பந்தாட படலாம் என்பதை இவர் தெளிவாக எடுத்து காண்பித்துள்ளார் .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன










