எரிந்த உணவகம் நடந்தது என்ன
உணவகம் எரிந்தது நடந்தது என்ன ,இலங்கை வாகரை பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,எரிந்த உணவகம் நடந்தது என்னஉணவகம் எரிந்தது நடந்தது என்ன ,இலங்கை வாகரை பகுதியில் உள்ள உணவகம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,
இந்த உணவகத்தில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ,
தீப்பிடித்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக தீயினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
தீயில் கடை பாரிய சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுதும் ,அந்த கடை பாரிய சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது.
இந்த கடையில் எவ்வாறான தீ விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பாக உடனடியாக முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
மின்சார ஒழுக்கு அல்லது எரிவாயு காசிவினால் இந்த கடை தீப்பற்றி இருக்கக்கூடிய சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன .
குறித்த கடை திடீரென தீப்பிடித்துக் கொண்டதை அடுத்து அருகில் உள்ள கடைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதனால் தற்பொழுது அந்த கடையினுடைய வியாபாரங்கள் அருகில் உள்ள கடையுடைய வியாபாரங்கள் என்பன பலமான இழப்புகளை சந்தித்துள்ளதுடன்.
அந்த வீதியால் பயணித்த மக்களும் ஒருவித பதட்டத்தில் பயணித்ததை காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சில சமூக ஊடகங்களில் இது தொடர்பான காணொளிகளும் வெளியாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இவ்வாறான கடைகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதும் அதற்கு பின்னால் சில தீய சக்திகள் இருப்பதான புதிய தகவல்களும் வெளியாக இருந்தன .
வர்த்தக போட்டி, பகைமை காரணமாக கடைகள் எரிப்பு
வர்த்தக போட்டி மற்றும் பகைமை காரணமாக இவ்வாறான வர்த்தக நிலையங்கள் உணவகங்கள், தீ பற்றி எரிக்கின்றன .
சில விஷமிகள் இவ்வாறன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான ,தகவல்களும் சமீப காலங்களாக இலங்கையில் வெளியாகி வருகின்றமை ,இங்கே நினைவு கூற தக்கது .
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன










