ஒருவர் அடித்து கொலை
வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நெடுந்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகறாரு முற்றிய நிலையில் 21 வயதுடைய வாலிபர் ஒருவர் இருவர் அடங்கிய குழுவினால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர் .
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் .
அடித்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவமானது தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக எழுந்த முரண்பாட்டை அடுத்து 21 வயது வாலிபரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை சம்பவங்கள் பலர் இவ்விதம் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .











