பயங்கரவாத தடை சட்டம் கொடியது
பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது ,செலவராச கஜேந்திரன் இலங்கையில் இலங்கை அரசினால் பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது என தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து நீடித்துச் செல்லப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான மிகப்பெரிய கொடிய சட்டமென செல்வராசா கையேந்திரன் அவர்கள் குமறி இருக்கின்றார்.
இந்த சட்டத்தை உடனடியாக நீக்கி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கையேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள்
மகசின் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை நேற்று நேரில் சந்தித்து பேசிய பொழுது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் .
கைதிகள் விடுதலை தொடர்பாக ஊரத்து குரல் கொடுத்து வரும் செல்வராசா கையேந்திரன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சென்று பார்வையிட்டு வருவது வழமையாக ஒரு நடவடிக்கையாக காணப்படுகின்றது .
அவ்வாறு சென்ற பொழுது கைதி களுடன் உறவாடிய பின்னர் அவரது உள்ள குமுறலை தற்பொழுது இந்த வடிவத்தை தெரிவித்துள்ளார் .
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு புலிகள் என்ற போர்வையில் குற்றம் சுமத்தப்பட்டு அப்பாவி மக்கள் சிறைகளில் அடைத்து வதைக்கப்பட்டு வருவதாக அவர் குமுறி இருக்கின்றார்.











