1400 பேர் பொலிசாரால் கைது
1400 பேர் பொலிசாரால் கைது ,போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு யுக்திய நடவடிக்கையின் பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர் .
இந்த 1403 பேரும் போதவஸ்து குற்றச் சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசார் விசேட படைகள் திடீரென்று மேற்கொண்டு வந்த சோதனையை நடத்திய பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 63 பெண்கள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டின் பெயரில் இத்தனை பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணித்தியாலத்தில் 1403 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் 1403 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளின் மீதும் திடீர் திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த யுக்திய போலீஸ் நடவடிக்கையின் தலைமை அதிகாரிகள் தெரிவித்திருந்தன.
அதனை அடுத்து தற்பொழுது யுத்திய போலீஸ் தேடுதல் நடவடிக்கையில் இந்த மிகப்பெரும் முதலைகள் சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மிகப்பெரும் போதவஸ்து வர்த்தக தொடர்பில் ஈடுபட்ட இரு குழுக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் போத வஸ்துக்கு எதிராக மக்கள் கலந்து வருகின்ற உலகில் அதனை தடுக்கவும் கட்டுப்படுத்த எமது போலீசார் திறமையான முறையில் செயலாற்றி வருவதை காண்பிக்கிறது .
என்கின்ற இந்த கண் கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேற்றவே இவை நடத்த பட்டுள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நாடளாவிய ரீதியில் அதிகமாக போதவஸ்து பாவனை காணப்படுவதால் ,மக்கள் சொல்ல நான் துயரங்களையும் சந்தித்து வருகின்றனர் .
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்








