1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்தை சீனா மேலும் நீட்டிக்கிறது
1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்தை சீனா மேலும் நீட்டிக்கிறது ,சீனா தனது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று ஏற்பாட்டை இலங்கைக்கு நீட்டித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
“இலங்கை மத்திய வங்கி மற்றும் சீன மக்கள் வங்கி, டிசம்பர் 2024 இல், 2021 இல் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தை, அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்
கீழ், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக புதுப்பித்தது,” என மத்திய இலங்கை வங்கி நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
CNY 10 பில்லியன் நாணய பரிமாற்ற வசதி சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது என்று நாணய கண்காணிப்பு அமைப்பு மேலும் கூறியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்கவும், சீன மக்கள் வங்கியின் சார்பில் ஆளுநர் பான் கோங்ஷெங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
2021 ஆம் ஆண்டில், இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மூன்று வருட இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்திக்கான இருதரப்பு வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி பின்னர் தெரிவித்தது.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்









