ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
ஹமாஸ் எதிரிகள் முற்றாக அழிக்கபட்ட பின்னர் போர் முற்றாக முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட், “காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும்.
ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.
அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன்.
மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.
அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.
நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.
அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.
கடந்த சில நாட்களாக எதிரிகளான ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது அந்த குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.
யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும்.
ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.” என தெரிவித்துள்ளார்.
மரண அடி வாங்கியும் வலிக்கல என்கிறார்களே .சப்பா யூத கற்பனைக்கு அளவே இல்லை போங்க .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா


















