ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
ஹமாஸ் எதிரிகள் முற்றாக அழிக்கபட்ட பின்னர் போர் முற்றாக முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட், “காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும்.
ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.
அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன்.
மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.
அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.
நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.
அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.
கடந்த சில நாட்களாக எதிரிகளான ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது அந்த குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.
யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும்.
ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.” என தெரிவித்துள்ளார்.
மரண அடி வாங்கியும் வலிக்கல என்கிறார்களே .சப்பா யூத கற்பனைக்கு அளவே இல்லை போங்க .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி
- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்
- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்
- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்
- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு
- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
- டிரம்ப் தாக்குதல் ரத்து


















