விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.














