லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது ,மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானது, பொலிஸாரின் சமிக்ஞைகளை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, வாகனத்தின் ஒரு டயர் மீது துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, லொரி சோதனையிட்டபோது, 17 மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்








