லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்
Spread the love

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

லண்டன் தென் மேற்கு பகுதியில் தாய் சிசுவை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருடர்கள் செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டுக்கு சென்று கதவை தட்டிய திருடர்கள் ,திருடர்கள் என அறியாது அந்த பெண்மணியும் கதவை திறந்துள்ளார் .

கதவை திறந்த பெண்ணை அப்டியே கத்திமுனையில் வீட்டுக்குள் தள்ளி சென்றனர் .

அவ்வேளை அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர் .

நீல நிற டெஸ்க்கோ ஜாக்கட் அணிந்த கறுப்பினத்தவர்களை சேர்ந்த இருவரே இந்த பட்ட பகல் வேளையில் பகிராங்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .

வீட்டில் இருந்த ரிங் டோர் கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியா நிலையில் , தற்போது அவை வைரலாகி வருகிறது .

இரண்டு திருடர்களை கைது செய்திடும் ,தீவிர நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

குறித்த பகுதியில் மேலதிக காவல்துறை ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது .

இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,.

போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .