யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை

Spread the love

யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை

காங்கேசன்துறை ; இலங்கை காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் தலைமையில் வெட்டேட்டில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

தனிமையில் வசித்து வந்த இவர் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை .

மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவ்விதமே அவரது உடலில் காணப்பட்டுள்ளது.

பெண்ணை கொலை புரிந்தவர்கள் அந்த தங்க நகைகள் எதனையும் எடுத்து செல்லவில்லை .

அவ்விதமான நிலையில் இந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வழமைபோல வீட்டுக்கு நீர் இறைக்க சென்ற உறவினர் ஒருவர் பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக உள்ளது கண்டு காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார் .

இதனை அடுத்து சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெண் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நாள் தோறும் தொடரும் இவ்விதமான கத்தி வெட்டு கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை அறியப்படாத மர்மமாக உள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *