இலங்கை -யாழிற்கு கடுகதி வேக நெடுஞ்சாலை
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழிற்கு வரை அதிவேக நெடுஞ்சாலை
அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்
கண்டி – கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்,
கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான றுவன்புர அதிவேகப் அதிவேகப் நெடுஞ்சாலையும், குருநாகலில்
இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதிவேகப் பாதைக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயமான இழப்பீட்டு
முறை அமுல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.
நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனிதப் பொருளை தரிசித்ததன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
யாழிற்கு கடுகதி சாலை- வீதியோர வீடுகள் இடிக்க நடவடிக்க்கை
கண்டி நகரின் வாகன நெருக்கடியைக் குறைப்பதற்காக விலியம் கொபல்லாவ மாவத்தையிலிருந்து தென்னக்கும்புர வரை 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுரங்க வழிப் பாதை
அமைக்கப்படும். நகரின் வாகன நெரிசலை தவிர்க்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர்; லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
வீதி வடிகால் அமைச்சினால் வீதி நிர்மாணம் என்ற புரவியில் வீதிஉவட்டாரத்தில் இருந்த பல தமிழர்கள் வீடுகள் ,கடைகள் என்பன இடித்து அழிக்க பட்டது .
அது போன்று மீளவும் இந்த விடயம் தமிழர் பகுதியில் இடம்பெற போகிறது .
அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறு தமிழர்கள் வீடுகள் இல்லாது அழிக்கும் நகர்வும் ,அந்த மக்களை அங்கிருந்து அகற்றும் படும் நரித்தனம் இடம் பெறப்போகிறது
ஒன்றை புரிவதற்கு ஒன்றை விட்டு கொடுக்க வேண்டும் எனவும் அதற்குரிய நஷ்டா துடை அரசு தரும் என்ற ஆசை வார்த்தைகள் பேச படும்
வீதி அமைப்பின் ஊடாக தமிழர் வீடுகள் அழிக்கும் விடயம் இனி வரும் காலங்களில் யாழ் நோக்கி பேச பட போகிறது
யாழிற்கு இதுவே அரசியலாக மாறி வெடிக்க போகிறது






