யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளக்கல்மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய கந்தையா கீர்த்திகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். .
யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மாடு மேய்க்கச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வேளையில் காட்டு யானை வழிமறித்துத்தாக்கியுள்ளதாகவும்
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றய நபர் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா
















