மிஞ்சிய சாதத்தில் சுவையான தோசை 5 நிமிடத்தில் ரெடி

மிஞ்சிய சாத்தில் சுவையான தோசை 5 நிமிடத்தில் ரெடி
Spread the love

மிஞ்சிய சாதத்தில் சுவையான தோசை 5 நிமிடத்தில் ரெடி

மிஞ்சிய சாதத்தில் ஐந்து நிமிடதில் சுவையான தோசை தயாரிக்கலாம் வாங்க.சாதம் வீட்டி, மிஞ்சி விட்டது என்ற கவலை உங்களுக்கு வேண்டாம் .

இப்பொழுதே அந்த மீதமான சாதத்தில் உடனடியாக விரைந்து தோசை செய்திடலாம் வாங்க .

சாதத்தில் தோசை செய்வது எப்படி ..?
தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

தோசை செய்முறை ஒன்று

மீதமான சாதம், ஒரு கப் எடுத்து கொள்ளுங்க .அதே கப் அளவுக்கு ரவை ,அதே கப்பில ஒரு கப் தண்ணீர் ,கூடவே ரவை எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி வாங்க .

ஐந்து நிமிடமே இந்த ரவை ஊற வைத்திடுங்க .ஊற வைத்த ரவை தண்ணியை ரவை நன்றாக இழுத்திருக்கும் ,அதன் பின்னர் மீளவும் நன்றாக சேர்த்து கலக்கி விடுங்க .

மிஞ்சிய சாதத்தில் சுவையான தோசை 5 நிமிடத்தில் ரெடி

ஊற வைத்தவற்றை மிக்சியில் அரைத்து எடுத்திருங்க .அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு,சோடா உப்பு ,ஒரு எலுமிச்சை பழம் சாறு சேர்த்து நன்றாக கலக்கி வாங்க .

புளிச்ச மா போல ரெடியாடிச்சு .

அடுப்புல தோசை கல்லை வைத்து, தோசை ஊத்தி சுடுங்க .
இரண்டு பக்கம் தோசை பிரட்டி எடுத்து சுடுங்க .

ஊத்தை அப்பம் போல இப்போ மீதமான மொறு மொறு சாதத்தில் தோசை ரெடியாகிடுச்சு .

மெல்லியதாய் தோசை சுட்டு அதன் மேலே மிளகாய்,உப்பு எண்ணெய் கலந்த கலவையை இந்த தோசை மேல ஊற்றி விடுங்க .

காரமான மசாலா தோசை கிடைக்கும் ,மொறு மொறு தோசையாக இது சுவைக்கும் .

கிரிஸ்பியான மொறு மொறு தோசை ரெடியாகிடுச்சு .

அப்புறம் என்ன மக்களே இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க.

Leave a Reply