மனைவியை அடித்து இழுத்து செல்லும் கணவன்
பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத குறித்த நபர் முற்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற போது பெருமளவிலான மக்கள் அங்கு இருந்த போதிலும், அவளை காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி








