 
                
மணமகள் மீது அசிட் வீச்சு
திருமண வைபவத்துக்கு தயாராகி கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அந்தப் பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத சடங்குகளுடன் காலி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பெண்ணின் முன்னாள் காதலனே அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்றும் அவரை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
    


















