மட்டக்களப்பில் நித்திரையில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு
மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் தூக்கத்தில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் உள்ள நெடியமடு கிராமத்தில் தூக்கத்தில் இருந்த வேளை வீட்டில் நுழைந்த நபர்கள் தனது மூன்று பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில் குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்புடன் வசித்து வந்துள்ளார்.
வாள்வெட்டில் படுகாயமடைந்த குடும்ப பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.







