மக்கள் காயம் அமெரிக்காவில்
மக்கள் காயம் அமெரிக்காவில் ,அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் 10 பேர் காயம் என அமெரிக்கா போலீஸார் தெரிவித்துள்ளனர் .
அமெரிக்காவில் கொஸ்டின் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினம் பாட்டி நிகழ்வுகளில் பாட்டி நிகழ்வு இடம் பெற்ற மண்டபத்தின் கூரைமேல் ஏறியவர்கள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியதாகவும் இதன் பொழுதே 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அமெரிக்கா காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
ஆபத்தான நிலையில்
காயமடைந்தவர்கள் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வாரத்தில் அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது .
இடைவிடாது தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் அமெரிக்கா மக்கள் மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதாக மக்கள் சமூக ஆர்வலர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் ஆயுத பாவனையை தடுத்து நிறுத்த கோரி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற பொழுதும் ஆளும் அமெரிக்க அரசுகள் அதனை ஏற்றுக்கொண்டு மக்களுக்குரிய பாதுகாப்பினை வழங்க மறுத்து வருகின்றனர்.
ஆயுத விற்பனையை தடுத்தால் அதில் பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்பதால் அந்த ஆயுத விற்பனையை தடுத்து நிறுத்த அமெரிக்க ஆளுமரசுகள் மறுத்து வருவதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வருகின்றது .
அமெரிக்கா வில் அனுமதி பெற்று துப்பாக்கிகள் பாவனைக்கு உட்படுத்த அரசு அங்கீகாரம் வழங்கி உள்ள நிலையிலேயே இந்த சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அனுமதி பெற்று தமது பாதுகாப்பிற்கான இவ்வாறான கொடிய ஆயுதங்கள் மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்







