பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு

Spread the love

பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு

இலங்கையில் இறுதி போரின் பொழுது இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு பத்து

ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்க படாது அவர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்

இந்த தீர்ப்பினை தாமத படுத்தும் நோக்குடன் கோட்டா பல்வேறு விளையாடல்களை அரங்கேற்றி வருகிறார் ,


அவ்விதம் யாழில் கல்லூரி வளாகத்தில் நினைவு தூபி உடைக்க பட்ட விடயம் பிரிட்டன் முதல் கனடா வரை பாராளுமன்றுகளில் ஒலித்துள்ளன

மேலும் இலங்கை புரிந்த போர் குற்றங்கள் ,மற்றும் இனப்படு கொலை தொடர்பிலான ஐநா விசாரணையை துரித படுத்தி பிரிட்டன் பாராளுமன்றில் குரல்கள் ஓங்கி ஒலித்துள்ளன

இது சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் ஆண்டி போல கோட்டாவுக்கு மாறியுள்ளது

சுமார் 48 மணித்தியாலங்களுக்குளாக சர்வதேச ரீதியில் இருந்து எழுந்தகண்டன எதிர்ப்பு மற்றும் ,ஆதரவு நிலை ஆளும் கோட்டாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

தமிழர் பலம் செயல் இழந்துவிட்டது ,விலை போனவர்களினால் யாவும் முடக்க பட்டு விட்டது என நினைத்த வேளை இந்த திடீர் புரட்சி இடம்பெற்றுள்ளது

காவடி ஆட்டம் இனி தான் நடக்க போகிறது ,இது கற்பனை அல்ல நியம ,சிங்கள தேசம் பட போகும் அந்த இடரை காத்திருந்து தமிழர் தேசம் பார்க்கட்டும்

உலக அரசியல் ஒழுங்கு மாறி செல்கிறது ,அது இலங்கைக்கு சாதகமாக அமைய போவதில்லை என்பது சமீப கால நகர்வுகள் திடமாக காண்பிக்கின்றன

  • வன்னி மைந்தன் –

Leave a Reply