பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில்
வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் களையிழந்து காணப்படுகின்றன.
மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு சில கடைகளில் மாத்திரம் கரும்புகளையும் பொங்கல் விற்பனை பொருட்களையும் காணக்கூடியதாக உள்ள போதும் அந்த கடைகளும் மக்கள் வரவில்லாமல் வெறிச்சோடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- போலந்துக்கு மேலும் 5000 துருப்புகளை அமெரிக்கா அனுப்பும் டிரம்ப்
- ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
- இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது தில்வின்
- ஒரு பெரிய அதிகாரத்துவ மாற்றம் வரவிருக்கிறது
- இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்











