கதிர்காமம் சென்ற பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்
பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம் ,கதிர்காமம் சென்ற பேருந்து ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 51 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் யாத்திரை நோக்கி பயணித்த பேருந்து , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது .
இதன் பொழுது அதில் பயணித்து 57 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடுமலை மட்டக்களப்பு வீதியில் கொங்கை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் ஏற்பட்டுவரும் பேருந்து விபத்துகளினால் ,மக்கள் பேருந்துகளில் பயணிக்கவே அச்சம் கொண்டு வருவதான தகவல்கள், கடந்த காலங்களில் வெளியாக இருந்தது.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது மேலும் பேருந்துகள் விபத்தில் சிக்கி மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்ற சம்பவங்கள் ,அதிகரித்து செல்வதால் ,பேருந்துகளை பயன்படுத்த மக்கள் இனி அச்சம் அடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் இருந்து மலையகத்தை நோக்கி செல்கின்ற பேருந்துகளை ஓட்டி செல்கின்ற சாரதிகளுக்கு மலையாகத்தின் வீதிகளில் பேருந்துகளை ஓட்டிச் செல்வதற்கு உரிய முறை பயிற்சி போதமை காரணமாகவே இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் கதிர்காமம் அல்லது மலையகத்தை நோக்கி பயணிக்கின்றவர்கள் உரிய முறை பயிற்றுவிக்க பட்ட அனுபவம் கொண்ட சாரதிகளை அமர்த்தி அவர்கள் பயணிக்க வேண்டும் என மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை







