பிள்ளைகள் முன்பாக தாய் கழுத்து வெட்டி கொலை

பிள்ளைகள் முன்பாக தாய் கழுத்து வெட்டி கொலை
Spread the love

பிள்ளைகள் முன்பாக தாய் கழுத்து வெட்டி கொலை

தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொல்பித்திகம, தல்பத்வெவ பிரதேசத்தில் இருந்து இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவரைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பிள்ளையுடன் மனைவி வரும் வழியை மறித்த சந்தேக நபர் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.