நெத்தன்யாகு உயிர் தப்பினார்

நெத்தன்யாகு உயிர் தப்பினார்
Spread the love

நெத்தன்யாகு உயிர் தப்பினார்

நெத்தன்யாகு உயிர் தப்பினார் என்கின்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது .அவர் பயணித்த வாகன தொடரணி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுதே அந்த விபத்தில் மயிரிழையில் நெத்தன்யாகு உயிர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரினை இடைவிடாது நடத்திக் கொண்டு வருகின்ற இன அழிப்பாளராக இஸ்ரேலுடைய அதிபர் நெத்தன்யாகுகாணப்படுகின்றார்.

அவரது ஆட்சியில் பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறான காலப்பகுதியில் ,தற்பொழுது இந்த வாகன தொடரணி விபத்தில் திடீரென நெத்தன்யாகு சிக்கி இருக்கிறார்.

இந்த விபத்தில் இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு காயமடைந்தாரா என்பது தொடர்பாக ,உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இவர்கள் பயணித்த வாகன தொடரணிக்குள் ,மோட்டார் சைக்கிள் ஒன்று நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது .

தொடர்ந்தும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது இந்த செய்தி உலகளாவிய ரீதியில் பர பரப்பை .ஏற்படுத்தியுள்ளது .