நடிகை ஷபானா விபத்தில் சிக்கினார்

Spread the love

நடிகை ஷபானா விபத்தில் சிக்கினார்

பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி விபத்தில் சிக்கிய விவகாரம் தொடர்பாக, அவரது கார் டிரைவர் மீது எப்.ஐ.ஆர். பதிவாகியுள்ளது.

நடிகை ஷபானாஆஸ்மி கார் விபத்தில் சிக்கிய விவகாரம் – டிரைவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு
ஷபானா ஆஸ்மி
மும்பை:

இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகைஷபானா ஆஸ்மி (69). இவர் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்

மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

நடிகை ஷபானாவிபத்தில் சிக்கினார்

மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றபோது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்கு

உள்ளானது. இதில் அவர் படுகாயமடைந்தார். ஷபானா ஆஸ்மி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சீரான நிலையில் இருந்தாலும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்மியுடன் அவரது கணவர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார். இந்த விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

நடிகை ஷபானாவிபத்தில் சிக்கினார்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் டிரைவர் ஆம்லேஷ் யோகேந்திரா குமார் என்பவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்மியின் கார் லாரியின் பின்புறம் மோதியதில் லாரி சேதமடைந்துள்ளது. இதுபற்றி லாரி டிரைவர் ராஜேஷ் பாண்டுரங் ஷிண்டே போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதன்படி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். டிரைவர் வேகமுடன் கார் ஓட்டியதில், லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது என அதில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் டிரைவர் ஆம்லேஷ் யோகேந்திரா

தண்டனை பெறுவார் எனவும் இவர் மீதே குற்றம் என ரசிகர்கள் கருத்துக்களை

பகிர்ந்து வருகின்றனர் அடுத்து என்ன ..?

நடிகை ஷபானா விபத்தில்
நடிகை ஷபானா விபத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *