தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள் ,ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் பெவரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








