தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

Spread the love

தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்
கோப்பு படம்
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் – 468
செங்கல்பட்டு – 6,633
சென்னை – 68,254
கோவை – 741
கடலூர் – 1,257
தர்மபுரி – 121
திண்டுக்கல் – 704
ஈரோடு – 248
கள்ளக்குறிச்சி – 1,205
காஞ்சிபுரம் – 2,547
கன்னியாகுமரி – 560
கரூர் – 166
கிருஷ்ணகிரி – 185
மதுரை – 4,085
நாகை – 285
நாமக்கல் – 109
நீலகிரி – 124
பெரம்பலூர் – 168
புதுக்கோட்டை – 350
ராமநாதபுரம் – 1,385
ராணிப்பேட்டை – 1,148
சேலம் – 1,247
சிவகங்கை – 512
தென்காசி – 448
தஞ்சாவூர் – 496
தேனி – 1,009
திருப்பத்தூர் – 259
திருவள்ளூர் – 4,806
திருவண்ணாமலை – 2,497
திருவாரூர் – 539
தூத்துக்குடி – 1,162
திருநெல்வேலி – 1,030
திருப்பூர் – 204
திருச்சி – 972
வேலூர் – 1,932
விழுப்புரம் – 1,186
விருதுநகர் – 895
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 432
உள்நாட்டு – 366
ரெயில் நிலைய கண்காணிப்பு – 416

மொத்தம் – 1,11,151

      Leave a Reply