ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம்

Spread the love

ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் வே.இராதாகிருஸ்ணன்

ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தாலே எதனையும்

மக்களுக்காக செய்ய முடியும். மக்களும் தங்களுக்கு தேவையானதை அரசியல் பிரதிநிதிகளிடம் சென்று செய்துக் கொள்வார்கள் இதுவே உண்மையானது.

இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான ஒரு அரசியல் பிரதி நிதிநிதியை தெரிவு செய்துக் கொள்ள வேண்டும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது நாட்டில்

நடக்கும் ஆட்சி மக்கள் ஆட்சி முன்னைய காலங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுவது போல் மன்னராட்சி நடைபெறவில்லை என்று கூறுகின்றார் நுவரெலியா

மாவட்ட பாராளுமன்ற உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் (06.02.2020)

நுவரெலியா மாவட்டம் இராகலை புரூக்சைட் செல்வகந்த தோட்டம் சில்வர்கண்டி பிரிவில் மக்கள் பாவனைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்

அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கபட்ட கொங்ரீட் பாதைகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு

உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் இம்முறை வெளிவந்த உயர்தர பெறுபேற்றின்

அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கபட்டனர்

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

தற்போது இந்த நாட்டில் நடக்கும் ஆட்சி மக்கள் ஆட்சி முன்னைய காலங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுவது போல் மன்னராட்சி நடைபெறவில்லை.

மக்கள் தங்கள் பிரச்சனைகளை; அரசியல் பிரதிநிதிகளிடம் சென்று கூறி அதற்கான திர்வினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு அவர்கள் அவர்கள் சார்பான ஒருவரை பிரதேச

சபைக்கோ மாகாண சபைக்கோ பாராளுமன்றத்திற்கோ தெரிவு செய்துக் கொள்ள வேண்டும். அரசாட்சியில் அரசேனே மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து

சேவை செய்வான். தற்போது அந்த அரசாட்சி இல்லை. மக்கள் ஆட்சியே இருககின்றது. மக்கள் ஆட்சியை

மக்களளே செய்ய வேண்டும். அதற்காக மக்கள அனைவரும் பாராளுமன்றம் செல்ல முடியாது. அவர்

கள் சார்பாக ஒருவரை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்ய வேண்டும். ஜனநாயக ஆட்சியில் ஜனாதிபதி பிரதமர் பாராளுமன்றம் மாகாண சபைகள் உள்ளுராட்சி சபைகள்

ஆகிய காணப்படுகின்றன. இவற்றுக்கு மக்கள் சார்பாகவே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றன. அதற்து மக்கள தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர்.

இனி வரும் காலங்களில் பொது மக்கள் தங்களின் வாக்குரிமையை சரியாக பயன்படுத்தி உங்களுக்கு என்று

ஒரு அரசியல் பிரதிநிதியை பெற்றுக் கொள்ளுங்கள். என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் மக்களின்
ஜனநாயக நாட்டில் மக்களின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *