சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

Spread the love

சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரும் ,அந்த

கட்சியின் சட்டத்தரணியாகவும் ,பேச்சாளருமாக விளங்கும் சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டம் மற்றும் அந்த தமிழ்

தேசிய விடுதலைக்கு எதிரான விரோத செயல் பாட்டினை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளார்

இந்த விளைவினால் 28 ஆசனங்களை தமது பக்கம் வைத்திருந்த கூட்டமைப்பு கடந்த பாரளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கி சுருண்டது .

இந்த படு தோல்விக்கு வித்திட்டவர் இந்த சுமந்திரன் ,அதே போன்று தற்பொழுது மீள பாராளுமன்ற தேர்தலை நெருக்கடியான

நிலையில் எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் , சிங்கள எயமானர்களுக்கு தனது விசுவாசத்தை தெரிவித்து கொள்ள

,கூட்டமைப்பை மேலும் பலமிழக்க செய்து அந்த கட்சியை முற்றாக அழிக்கும் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடைப்படையில் தனது பயணத்தை சுமந்திரன் தொடர்கிறார்

இந்த விடயங்களின் பின்னால் தற்பொழுது கூட்டமைப்பிற்குள் பெரும் உட் சண்டைகள் முற்றி வெடித்துள்ளன .அரச பங்களாவில்

ஆடம்பரமாக வசிக்கும் சம்பந்தர் ,அவரது செல்ல பிள்ளை சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட ,மாவை போன்ற

முக்கியமானவர்கள் சம்பந்தருடன் சண்டையிட ,தற்பொழுது கூட்டமைப்பின் பலம் சிதறும் நிலையில் செல்கிறது

இந்த மோதல்களை எதிர்பார்த்து காத்திருந்த கோட்டபாய சில தமிழர் எம்பிகளை விலை கொடுத்துவங்குவதில் தீவிரம் காட்டி

வருகின்றனர் ,சரவணபவன் உள்ளிட்ட சிலர் விலைபோகும் நிலையில் உள்ளனர்

சுமந்திரனின் ராயத்தந்திரம் இது தான் என்பதை இங்கே மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ,.சம்பந்தர் ,சுமந்திரனை

தோற்கடிப்பதும் , மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பை சிறந்த திசையில் வழி நடத்தி செல்ல முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக வீழ்ந்து கிடக்கிறது

  • வன்னி மைந்தன் –
சுமந்திரனை காப்பாற்றும்
சுமந்திரனை காப்பாற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *