சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்
சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள் ,நாம் தமிழர் கட்சி உடைய சீமான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற போவதாக தற்பொழுது அர்ச்சுனா அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு எமது நாட்டில் எமது தமிழ் மக்கள் சிங்கள அரசு பயங்கரவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அதன் பின்னர் உதயமானது நாம் தமிழர் கட்சியாகும்.
அந்த கட்சியினுடைய வருகையை அடுத்து தமிழகத்தில் புலி கொடி கட்டி பறந்தது. முப்படைகளை கட்டி ஆண்ட எங்கள் தலைவர் பிரபாகரனுடைய கொள்கைகளை எடுத்து சீமான் உலக பரப்பில் பரப்பினார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தமிழீழ விடுதலைப் புலிகளுடைய கோட்பாடுகள் கொள்கைகள் மழுங்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில் ,
அதனை தாங்கி பிடித்து தூக்கி பிடித்து விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலத்தில் எவ்வாறு எழுச்சி இருந்ததோ அதை எழுச்சியை தக்க வைத்துக் கொண்டவர் சீமான்.
விடுதலை புலிகளுடைய ஆயுத போராட்டம் அழிக்கப்பட்டது, அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் ,அந்த ஆயுதப் போராட்டத்தில் இடம்பெற்ற யுத்த கள காட்சிகள் போல,
சீமான் ஒவ்வொரு மேடைகளிலும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் முழங்கியதே தமிழ் மக்கள் மத்தியில் அவர் கடவுளாக பார்க்க வைத்தது.
அவ்வாறான காலப் பகுதியில் 15 வருடங்கள் கழித்து தற்பொழுது இலங்கை ஈழ மண்ணில் சீமானாக அர்ச்சனா வெடித்து பறந்து இருக்கின்றார் .
அவ்வாறான அர்ச்சனாவை மக்கள் இரண்டாவது சீமானாகவே இன்று வரை பேசி வருகின்றனர்,ஏற்று கொண்டனர் .
அண்ணன் சீமான் மூத்தவராகவும் , தம்பி சீமான் அர்ச்சுனவாகவும் இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றார்.
இரண்டு பேரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் அவர்கள் எங்களுடைய விடுதலை நோக்கி பயணிக்கிறார்கள் ஆதலால் இந்த மண் ,மக்கள் ,விடுதலை மிக விரைவில் வெற்றி கொடி கட்டு என்பதாகவே.
சீமனோடு ஒன்றித்த பயணிக்க போவதாகவும் அவரை அவரை நான் அவர்கள் அண்ணனாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்பொழுது அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளது அவருக்குள் ஏற்பட்ட ஒரு புரிதலாக பார்க்கின்றோம்.
விடுதலைக்காகவே சீமானும் போராடிக் கொண்டிருக்கின்றார் அந்த விடுதலைக்காகவே அர்ச்சனா ராமநாதன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இருவரும் இரு நாடுகளில் ஒரே கொள்கையோடு பயணிக்கிறார்கள் இதுதான் எங்களுடைய ஒற்றுமையை காண்பிக்கின்றது.
ஆம் என் தம்பி அர்ச்சனா மக்களுக்காக போராடுகிறான் அவர்கள் ஆதரவாக போராடுகிறான், அதனால் அவளுடன் நான் ஒன்றித்த பயணிப்பேன் .
என்பதுதான் அண்ணன் சீமான் உடைய நினைவாகவும் கொள்கையாகவும் இருக்கும் .
நாங்கள் முடிந்தால் அன்னான் சீமானுடன் பேசுவோம் இருவரும் ஒன்றித்த பயணிப்பதற்காக நாங்கள் கண்டிப்பாக நாங்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுவோம் என்பதை மீளவும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தடம் மாறாத திசையில் எங்களது இனமான விடுதலைக்காக அண்ணன் சீமான் அவர்களும் ,அண்ணன் அர்ச்சுனா அவர்களும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் .
அவர் பின்னால் இந்த இரண்டு பேரை ஆதரிக்கின்ற இந்த ஈழ மக்களும் இந்த உலகத் தமிழர்களும் ஒன்றாக நிற்போம் என்பதை உறக்க இந்த அரங்கில் எடுத்துரைத்திருக்கின்றார் எங்களது அர்ச்சனா.
தடம் மாற பயணிப்போம் தடைகளை உடைத்தெறிந்து இனமானம் காப்போம் .இப்பொழுது எங்களோடு இரு சீமான்கள் .
ஈழ தாய் இப்பொழுது தான் கொஞ்சம் புன்னகை விடுகிறாள் .விதைகள் முளைக்கின்றன ,கிளைகள் வெடிக்கின்றன ,இலைகள் முளைக்கின்றன .இனமான காற்று இப்பொழுது புயலாக வீசுகிறது .
-வன்னி மைந்தன் –












