சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

Spread the love

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .

துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .

இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .

குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும் .

    Leave a Reply