சிந்துஜாவின் கணவர் தற்கொலை
சிந்துஜாவின் கணவர் தற்கொலை ,மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்தியாவின் கணவரான எஸ்தன் என்கின்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியை பறிகொடுத்து மன அழுத்தத்தில் சிக்கித் தவித்து வந்த இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ,அதனுடைய உச்சகட்ட மான உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் மனைவி இறந்த நிலையில் தற்பொழுது ஏதும் செய்ய முடியாத நிலையில் பல இன்னல்களுக்கும் சிக்கி தவித்து வந்த கணவர் தற்பொழுது அரலி விதையினை உண்டு தற்கொலை செய்துள்ளார் என்ற சம்பவம் வெளியாகி இருக்கின்றது.
தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாகவே தற்பொழுது மனைவி இறந்ததாக வழக்கு தொடரப்பட்டு வருகின்ற நிலையிலும், 5 பேருக்கு பணிகளை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வந்திருந்தது அதனை அடுத்து தற்பொழுது கணவர் தற்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரை தற்கொலை செய்து அரசியல்வாதிகள் தோன்றினர் அல்லது இவர் தற்கொலை செய்தாரை என்கின்ற விடயமே கேள்வியாக எழுந்துள்ளது.
கடுமையான மன அழுத்தம் கொடுத்து அரசியல்வாதிகளின் கொலை மிரட்டல் காரணமாக அது உச்ச மன உளைச்சலுக்கு சென்றிருந்த இவர் தற்பொழுது தற்கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
மருத்துவமனைகள் தம்மை தான் காத்துக் கொள்வதற்காக தற்பொழுது அப்பாவிகள் விளையாடி வருகின்ற செயல்பாடாகவே தற்பொழுது சிந்தியாவின் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் காணப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








