சவுதி பஹ்ரைன் இணைப்புப் பாலம் மூடப்பட்டது

சவுதி பஹ்ரைன் இணைப்புப் பாலம் மூடப்பட்டது
Spread the love

சவுதி பஹ்ரைன் இணைப்புப் பாலம்மூடப்பட்டது

சவுதி பஹ்ரைன் இணைப்புப் பாலம் மூடப்பட்டது ,ஈரானின் உள்கட்டமைப்பைத் தகர்ப்பதாக டிரம்ப் மிரட்டியதை அடுத்து சவுதி-பஹ்ரைன் இணைப்புப் பாலம் மூடப்பட்டது

தாக்குதல்கள் குறித்த அச்சத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் கிங்

ஃபஹத் இணைப்புப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அப்பாலத்தைக் கண்காணிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்ட ஈரானியத் தாக்குதல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

25 கி.மீ (15.5 மைல்) நீளமுள்ள இந்த இணைப்புப் பாலம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டியதை அடுத்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தனது

பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் தாக்கப்பட்டால் “பேரழிவை ஏற்படுத்தும்” பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.