கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்

Spread the love

கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்

கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி உணவுப்பொதியை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவகம் ஒன்றின்

உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு இன்று (08) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்

பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்த போது ஒருவரின் பொதியில் கோழி இறைச்சியுடன் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியும் இருந்துள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக

கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்

முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8ம் திகதி

நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்தபோது கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை சுகாதார அதிகாரிகளால் இன்னொரு உணவகத்துக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்தனர். அதன் உரிமையாளரை
10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply