கொள்ளுப்பிட்டியில் 55 பேருக்கு கொரனோ

Spread the love

கொள்ளுப்பிட்டியில் 55 பேருக்கு கொரனோ

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்தமாக கொழும்பில் 251 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்

காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் புளுமென்டல்-4, பொரலை-5, தெமட்டகொட-17, கிரான்பாஸ்-32, கெசல்வத்த-25, கிருலப்பனை-4, கொள்ளுப்பிட்டிய-55, வெல்லம்பிட்டிய-1, மாளிகாவத்த-20,

தெஹிவளை-1, கொட்டாஞ்சேனை-11, மருதானை-20,மட்டக்குளிய-8, மிரிஹான-1, கொலன்னாவை-7, முகத்துவாரம்-4, கல்கிஸை-7

மற்றும் கோட்டை பிரதேசத்தில் 28 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹாவில் 118 தொற்றாளர்களும் களுத்துறை-16, புத்தளம்-6, இரத்தினபுரி-8, கண்டி-4, கேகாலை-4, மட்டக்களப்பு-1,

காலி-2, திருகோணமலை-1, நுவரெலியா-1, போகம்பறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் 24 பேரும் பொலிஸ்

திணைக்களத்தில் 91 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *