குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்
Spread the love

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

உக்கிரேனில் ரசியா இராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று வீட்டின் மீது வீழ்ந்து வெடித்தது .

இதன் பொழுது அந்த வீட்டில் வசித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட, நால்வர் பலியாகினர் .

இவ்வேளை அங்கிருந்த நாய் மட்டும் தப்பித்து கொண்டது .

எயமானர்கள் வீட்டுடன் இடிந்து இறந்து போன செயலை கண்ணுற்று நாயானது ,மிகவும் சோகத்தில் உறைந்துள்ளது .

அந்த இடிந்த வீட்டை விட்டு அகலாது ,அதே இடத்தில இருந்து கண்ணீர் விடும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வளர்த்தவர்கள் பிரியத்தில் திளைத்த நாயானது ,அவர்கள் இறந்த துயரை கண்ணுற்று ,சோகத்தில் உறைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .

மிருகங்கள் மனிதர்கள் மீது காண்பிக்கும் பாசம் என்பது, பெற்ற பிள்ளைகள் போல் உள்ளது .

ஆனால் மனிதர்கள் மட்டும் விலங்குகளை வேட்டையாடி உண்ட வண்ணம் உள்ளனர் .


விலங்குகள் மீதும் மனிதர்களை போல பாசம் காட்டினால் ,யாவும் ஓர் தாய் பிள்ளைகள் போல ஒன்றாக வாழ்ந்திட முடியும் .

ஆடு ,மாடு நாய்,கோழி பூனை போன்றன மனிதர்களுடன் ஒன்றாகி போனவர்களாக செல்ல பிராணிகளாக உள்ளன .


அவற்றையே மனிதன் உட்க்கொண்ட வண்ணம் பயணிக்கிறான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *