காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு
யான் ஓயா செயற்றிட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது.
கமசமக பிலிசந்தர எனும் கிராமத்துடனான உரையாடல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் காணிகளை இழந்த 36 பேருக்கு மொத்தமாக 40 மில்லியன் ரூபாவுக்கும்
அண்மித்த தொகை நட்டஈடுடாக வழங்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரால தெரிவித்தார்.
கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
அங்கு வருகை தந்த காணிகளை இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கும்படி ஜனாதிபதி முன்னர்
அதிகாரிகளுக்கு பணித்திருந்தார். அதற்கிணங்கவே இந்த நட்டஈடு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது






