காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
இவ்வாறு உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி என்ற 3 பிள்ளைகளின் தாயாவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்
- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்
- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது
- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை
- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன
















